Tuesday, January 4, 2011

விண்ணைத்தொடும் விலைவாசி ஏற்றம்

சிந்திப்பீர் செய்யல்படுவீர்

ஆம் நாம் தினமும்உபயோகப்படுத்தும்அணைத்துஅத்தியாவசியப்
பொருட்களும் மற்றும் உணவுப்பொருட்களும் பன்மடங்கு விலை 
உயர்ந்துள்ளது. பல பொருளாதார வல்லுனர்கள் இதற்க்கு உற்பத்தித் 
திறனின்மையும் உழைப்புதிரனின்மையும் காரணம் என்கிறார்கள்.

காரணம்:-  ஒருபுறம் தன்னால் இயன்ற இலவசங்களை தந்து மேலும் 
ஒரு சாரருக்கு நியாய விலை கடையில் மலிவு விலை பொருட்கள் 
வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு உதவி (ஊக்கதொகை) நியாய 
விலைக்கடைகளில் வழங்கப்படும் 1 ருபாய் அரிசி பெரும்பாலான 
இடங்களில் தரமற்று மாட்டு தீவனமாகவும் பயன் படுகிறது. இலவச 
வீடு போன்ற  வாழ்க்கைக்குத்தேவையான அனைத்தும் அரசே இனாமாக
கொடுத்தால் மக்களுக்கு நாம் ஏன்  கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் 
என்ற மனப்பான்மை தோன்ற காரணமாகிறது.  போதாக்குறைக்கு
எங்கும் எல்லா பணிகளிலும் மலிவு விலை மதுவில் மயங்கி கிடக்கும்
மன்மத ராசாக்கள். எல்லாப்பணிகளிலும் மந்தம் லஞ்சம்.  எனவே 
உண்மை உழைப்பும்  நாட்டில் மங்கிவிட்டது.

இதற்க்கு  மத்திய (மந்த) அரசும் பொறுப்பேற்காது !!!!

இந்த வீழ்ச்சியை யார் சரி கட்டுவது ? யார் பொறுப்பேற்பது ?
நம் நாடு எப்போது ஊழளற்ற , குற்றமற்ற, நேர்மையான
நல்ல கலாச்சாரத்தை கடைபிடிக்கும்  வளம்பெற்ற நாடாக
மாறுவது என்பதே அனைத்து  இந்திய ப்ரஜைகளின் அவாவாகும்!!! 

அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
 எப்படி செய்ய வேண்டும்?
எப்பொழுது செய்ய வேண்டும் ?


அன்புடன் இந்தியன்
சுந்தரராஜன்

No comments:

Post a Comment