Friday, December 24, 2010

ஜீவாதார உரிமையைப் பறித்தல்

இறைவன் படைப்பில் அவரவர் பிறப்பின்படி அவரவர் தொழிலை, தர்மத்தை கடைபிடிப்பதுதான் மனித தர்மம்! இது அனைவருக்கும் பொருந்தும்!     

ஆனால் அரசியல் புள்ளிகள் சமத்துவம், முற்ப்போக்குக்கொள்கை என்ற பெயரில், தொன்றுதொட்டு பாரம்பரியத்தொழிலாக வாழ்வின் ஜீவாதாரமாக நற்பணி,பொதுப்பணி
செய்து வருபவரின் உரிமையை பறித்து தகுதி அடிப்படையற்ற வேறொருவருக்கு கொடுப்பது, எந்த வேலையையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று வீண் வாதம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

குறிப்பாக கோவில் நற்ப்பணிகள்  மற்றும் அர்ச்சகர் பணிகள் என்றால் ஓரளவுக்கு இறையான்மையில் ஈடுபாடு மற்றும் ஒழுக்கம் நேர்மை சேவை மனப்பான்மை 
போன்ற  சில  தகுதி அடிப்படை  உள்ளவர்களாகவும் அந்தந்த ஆலயங்களுக்கேற்ப     சற்றேனும்  ஆகம விதிகள் அல்லது வழிமுறைகள்  அறிந்தவராய் இருத்தல்  வேண்டும்!
இப்படி எந்த அடிப்படைத் தகுதிகளும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு தீங்கு
செய்யும் நோக்கத்தில் முன்பின் அனுபவம் இல்லாதவரை இதுபோன்ற பனிகளுக்கு
பரிந்துரை செய்வது சற்றும்  நியாமற்ற  செயல்.. அல்லாமல் அவரவர் தகுதிகேற்ப
பொருத்தமான பணி நியமனம் செய்வதில் எந்த ஆக்ஷேபனையும்  இல்லை:

எந்த வேலையாய் இருந்தாலும் யார் செய்தாலும் முறையோடு தொழில் தர்மத்தோடு   செய்தால்தான் முழுமை அடையும்.  இது எல்லாப்பணிகளுக்கும்  பொருந்தும் .

அப்படி இருக்க

இதுபற்றி சமீபத்தில் ஒரு  தொலைக்காட்சியில் கேள்வி நேரத்தில் ஒரு கட்சி சார்ந்த ஒரு ப்ரொமுகர் கூறுகையில்  பகுத்தறிவு தந்தை பெரியார் கூறினாராம் எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று.  கடவுள்/கோவில் போன்றவைகளில் மூட நம்பிக்கை என்று 
முழங்கிய  அவர் இதுபற்றி எப்படி பேசி இருப்பார்?

தனது தனிப்பட்ட கருத்து என்று கூறவேண்டியதுதானே?
ஏன் பெரியவர் பெயரை இழுக்க வேண்டும்!

மேலும் இது போன்ற வீண் வாதத்தை  இந்து அல்லாத மற்ற
பிரிவினரிடம் கூற முயற்சிக்கலாமே! ஏன் முனைவதில்லை ?

யாரும் எந்த வேலையும் செய்யலாம் என்றால் இவர்கள் வீட்டு 
சாக்கடை, கழிவறை  அடைத்துக்கொண்டால்,  தானே சரி செய்து
கொள்வதுதானே ஏன் மற்றவரை அழைக்கிறார்கள்? 

அதில் சமத்துவத்தை காணவில்லையா?

மற்றவருக்காக வக்காலத்து வாங்குபவர் முதலில்
தான் மாறிக்கொள்ளலாமே!  அவர்கள்  தான தர்மம்,
நற்ப்பணிகள் செய்யலாமே ! அதை விடுத்தது
சர்ச்சைக்குரிய வாதம் எதற்கு?  

அவரவர் வேலைகளை அவரவர் செய்தாலே
நாடு வளம் பெரும் நம் வீடும்  நலம் பெரும்.

மக்களில் ஒருவன்
சுந்தரராஜன்

2 comments:

  1. [29/03, 7:25 AM] S.S.Sundararajan: நமது சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் TV Quiz seen :மோகன் எழுதி நடித்த அற்புத காட்சி இப்போது நடைமுறையில் உள்ளது:: பேட்டியில் தாறுமாறாக உளரும் மேனேஜரை: ""அவனை எங்கிட்ட விட்டுடு 2020 மாதிரி சீக்கிரம் முடித்திடலாம்""அன்று ஸ்ரீ கிருஷ்ணாவாக மோகன் சொன்ன வார்த்தை இந்த வருடம் 2020 ல் உலகமெங்கும் பலர் வாழ்வு சீக்கிரம் முடிகிறது:: பெரியா சொன்னா பெருமாள் சொன்னமாதிரி:: பெருமாளேதான் சொல்லியிருக்கிறார்🙏
    [29/03, 7:29 AM] S.S.Sundararajan: இதை FB யில் போட்டால் என்ன! கடவுளாக வேஷம் போட்டவர் இன்று கடவுளாகிவிட்டார்👏

    ReplyDelete