இப்போது உள்ள சூழலில் மக்கள் இலவசங்களாலும் நியாயமற்ற
சலுகைகளாலும் மூழ்கி மங்கிக் கிடக்கின்றனர்
ஆனால் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியைக்கண்டுள்ளது மனிதன்
மற்றும் உயிரினங்கள் வாழ்விற்கு தேவையான அத்துனைப் பொருட்களும்
எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ள இந்நிலையில் .
எதையும் யாரும் இலவசமாகவோ குறைந்த விலையிலோ
வழங்குவதேன்பது கடுகளவும் சாத்தியமில்லை!
எந்தத் துறையிலும் ஒருவரும் தன் கடைமையை உணர்வதில்லை!
உண்மையாகவும் நேர்மையாகவும் பொதுமக்கள் நன்மைக்காவும்
உழைக்க ஒருவரும் இல்லை!
சேவை மனப்பான்மையற்ற அதிகாரிகள்
தேச பற்று கொஞ்சமும் இல்லாத தலைவர்கள் ,தொண்டர்கள்
லாப நோக்கை மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தகங்கள்
மேலும்
உணவுப்பொருட்கள் உற்பத்தி இல்லை
விலை நிலங்கள் பணம் பதவி படைத்தவர்களால்
ஆக்க்ரமிக்கப்படுகிறது! தாம் செய்யும் தொழிலை
தெய்வமாகக்கருதும் விவசாயிகளும் தானும் உண்டு பிறர்க்கும்
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி அவர்களும் தற்போது உள்ள சூழலில் தமக்குத் தேவையான உணவு மட்டும் உற்பத்தி செய்தால் என்ன?
என்று எண்ணத் தோன்றுகிறது
நடுத்தர வர்க்க மக்கள் நிநைத்துக்கூட பார்க்க முடியாத
அளவு தங்கம் வெள்ளி துணி மணிகள் போன்ற பொருட்களின்
விலை வாசி ஏற்றம்!
காரணம் மனிதர்களிடம் உழைப்புத்திறன் மங்கிவிட்டது
தனிப்பட்டவர்கள், குறிப்பிட்டவர்கள் தன் சுயநலத்திற்காக,
சுயலாபத்திற்காக சில வீட்டு தேவைகளை இலவசமாகவும்
குறைந்த விலையிலும் வழங்குவதால் மக்களின் சுறுசுறுப்பின்மை
தூண்டப்படுகிறது உழைப்புத்திறன் மாள்கிறது!
இதனால் எல்லாத்தேவைகளையும் அடுதவர்களே
வழங்க வேண்டும் என்ற அவல நிலைக்குத்
தள்ளப்படுகிறார்கள். அவர்கள் கை ஏந்தும் நில்லைக்கு
ஆளாகிறார்கள்
இதேபோல் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு
ஊக்கத்தொகை (மறுபடியும் தோல்வி அடையவா அல்லது
இந்தத் தோல்விக்கு சன்மானமா) மேலும் பட்டம் படித்த
வேலை இல்லாத இளைஞ்ர்களுக்கு ஊக்கத்தொகை
இவை எல்லாம் எதற்கு? இவர்கள் கொடுக்கும் சிறு தொகை
எதற்குப் பயனளிக்கும்? அவர்களை ஏன் சோம்பேரியாக்குகிரார்கள்
எழுச்சிமிகு இளைஞ்ர்களே சிறுவயது முதலே நம் நாட்டின்
தேசப் பற்று கொண்ட தியாகிகள் மகாத்மா காந்தி, நேரு மஹா கவி சுப்பிரமணிய பாரதி வாஞ்சிநாதன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பலர் நாடு சுதந்திரம் பெற நாட்டிற்காக சுயநலம் கருதாது உயிர் தியாகம் செய்தவர்கள்!
அப்படிப்பட்ட வீரத் தமிழர்கள் வாழ்ந்த இந்நாட்டில்.
நேர்மையாக உழைக்கும் தன்மையை உயர்த்த வேண்டும்!
உழைத்து ஊதியம் பெறவேண்டும்! கல்வித் தரத்தை
உயர்த்த வேண்டும்! சாதி மத வேறு பாடின்றி நன்றாகப்
பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்!
சலுகைகள் வழங்கலாம் ஆனால் மதிப்பெண்களில்
பாரபட்ஷம் கூடாது! தரமான கல்வி யாரிடதில்
இருந்தாலும் பாராட்ட வேண்டும் அதன்படி
முன்னுரிமை வழங்க வேண்டும் !
இலவசங்களையும் பாரபட்ஷங்களையும் ஒதுக்க வேண்டும்
தீய சக்திகளுக்கு இடம் கொடேல், கொலை கொள்ளை
தேசத்துரோகச்சயல்களை வேரோடு அழிப்போம்
வளமான !தரமான ! நிலையான! நியாமான! மகிழ்வான
நாடாக இந்தியாவை மாற்றுவோம் மகிழ்வோடு வாழ்வோம்
நாடுயர வீடுயரும் பின் நாமும் உயர்வோம்
பாரத தேச விஸ்வாசி
சுந்தரராஜன்
No comments:
Post a Comment