Tuesday, February 18, 2014

அன்பர்களே

புனேயில் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 24/11/2013
மாலை 6.30 மணிக்கு புனே தமிழ்ச்சங்கம் சார்பாக
நேரு மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது.
நாடகம் அரங்கம் நிரம்பி வழிய நல்ல கைதட்டலோடும் ரசிகளின் ஏகோபித்த வரவேற்போடும் நடந்தேறியது.
 

 குரிப்பாக இங்கு நாடகம் க்ரேசி மோகனனின் சிறந்த நட்பை வெளிப்படுத்துவதாகவும் அவரது ஆருயிர் நண்பர் திரு சு.ரவி தனது நண்பநாக மட்டுமல்லாமல்  தனது ஆசானாக  விளங்குவதையும்  சபையில் அறிமுகபடுத்தி விழாவை சிறப்பித்தது அரங்கத்தினரை மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

உண்மையான நட்புக்கு இலக்கணம் கோப்பேருஞ்சொழரும் பிசிராந்தையாரும் என்று படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாமலே
  நட்பை  பரிமாறிக்கொண்டனர். அந்த காலத்தில் டெலிபோன் வசதியோ கைபொன் வசதியோ இல்லை. அனால் இந்த நண்பர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களிலும் நட்பின் தொடர்பிலேயே இருப்பவர்கள் .அதற்கான சாதனங்கல்  நிறையவே  உள்ளனவே
செல் போன்,  இ மெயில் போன்றவைகள் . 

மோகன் சென்னையில் விடும் மூச்சை  சு.ரவி புனேயில் சுவாசிபார் என்றால் பாருங்களேன்.

திரு மோகன் அவர்கள் சு.ரவியை பற்றி குறிப்பிடும்போது எனக்கு எழுத்து,கலை,கவிதை அனைத்தும் சொல்லிக்கொடுத்த என் ஆத்மார்த்த குரு ,அவர்தான் எனக்கு ஆசான் என்றெல்லாம் வர்ணித்தார்.  மோகன் அவர்கள் எழுதும் கதையோ கதை வசனமோ வெண்பாவோ முதலில் சு ரவிக்கு தான் பரிசீலனைக்குச்செல்லும்.
அவர் அதை அவர் ஓகே செய்தால்தான் இவர் மேலும் தொடருவார்.
மேலும் இவர்கள் நட்பை  கிருஷ்ணரும்  குசேலரும் என்றும் சொல்லலாம்.  கிருஷ்ணர் மோகன்தான் அனால் குசேலர் ரவி குசேலரைப்போல் ஏழை பிராமணர் அல்ல . ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார் இவர் நல்ல நிலைமையில் உள்ளார்.
சாதாரணமாக ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள் அதை திரு கிரேசி மோகனும் சொல்வார்.
 அதேபோல் மோகனுக்கு பின்னாலும்  இருக்கிறார், அனால் (பெண்- girls) இல்லை PEN (எழுதுகோல்) இவர் PEN க்கும் பின்னால் சு.ரவி இருக்கிறார்.  உலகில் எவ்வளவு பெரிய மனிதாராக இருந்தாலும் எல்லா  வெற்றிக்கும் நான்தான்காரணம்  என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த காலத்தில் எனது வெற்றிக்கு அனைத்தும் தன்  நண்பன் சு.ரவிதான் காரணம்  பகிரங்கமாக சபையில் எடுத்துரைப்பதற்கு விசால மனம் வேண்டும் அது திரு கிரேசி மோகனிடம் இருப்பது பாராட்டுக்குரியது. 
திரு சு.ரவி ஒரு களங்கமில்லாத நிறைகுடம் கிரேசி மோகனுக்கும் எங்கள் குழுவினருக்கும் கிடைத்த பொக்கிஷம். பெருமைக்கும் புகழுக்கும் ஆசையற்றவர், தன்னடக்கமானவர் என்பதை அவரை பார்த்தவரும் பழகியவரும் நன்கு அறிவர்.

Ravi Subramanian's profile photo               

என்னதான் இவருக்கு பின்னால் பலர்  இருந்தாலும்
இவருக்கு எழுதும் திறனை அளிக்கும் சரஸ்வதியும்,கலைவாணியும் PEN மூலம்தானே அருள் புரிகிறார்கள்.
ஆகவே வணங்குவோம் கலைவாணியை.
வளர்க மோகனின்  எழுது பணி 

அன்பன் சுந்தரராஜன்
 "Emporer's New Cloths" which
i read  during my school days:

""
A person in search of a livelihood shouted in a crowded place “ Come on Come on!  Take in bulk very cheap priced sarees, shirts, pants, chudidhar and all dress materials…”  and showed with his empty hands each and every items…People crowded there and could not understand anything as nothing there in his hands though he showed as if it is there…All were surprised… He further shouted that his cloth items will be visible only to a person born to a mother of utmost chastity.  Some people believed it, paid money and took the empty (clothes). They are fools. There were some intelligent persons also, who gave him severe beating and taken him to police.""

 Moral of this story is ‘nothing is invisible’
if ivisible is nothing"
Please send your feedback
Tks/Sundararajan
சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகள் (கோழைக்கொலைகள்)
அன்றாடம்  செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம் தோல்விகளையும் எதிப்புகளையும் எதிர்த்து வெற்றி காணமுடியாத கோழைத்தனமான அப்பாவிகளின் அவசர முடிவு.
எல்லா வெற்றிக்கும் முன்னால் கொஞ்சம் எதிர் நீச்சல் போடாமல் வெற்றி கிட்டாது என்பதை உணராதவர்கள்.

மாணவர்கள் மதிப்பெண் குறைவால் தற்கொலை ,மற்றும் காதல் தோல்வியால் தற்கொலை இப்படி பல.

முதலில் பள்ளி மாணவவர்களுக்கு:  தாங்கள் சரியாக படிக்காததால்தான் தேர்வு சரியாக எழுத முடியவில்லை  என்பதை உணர்ந்தால் தற்கொலை முடிவுக்கு வர மாட்டார்கள் . மேலும் தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலைதான் என்பது சரியான முடிவு அல்ல. ஏன் மறுமுறை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளதே மீண்டும் நன்றாக படிப்பில் கவனம் செலுத்துவதொடு , நம் பெற்றோர்கள் நம்மைப் படிக்க வைக்க படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு பொறுப்புடன் அடுத்த தேர்வு எழுதி வெற்றி பெற முடியாதா?? ஏன் இந்த கோழைத்தனம். வாழ்க்கையில்  எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு,  தோல்வியை ஒரு சவாலாக ஏற்று பெற்றோர்களை மதித்து அவர்களிடம் பிரைச்சனையை எடுத்துரைத்து  அவர்கள் அறிவுரைகளை ஏற்று அலட்சியம் செய்யாமல் அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற தன்நம்பிக்கையோடும்,பொறுப்போடும் தேர்வு எழுதினால் நிச்சியம் வெற்றி பெறுவது உறுதி.
உங்கள் செயல்பாட்டினால் உங்கள் உயிர் இழப்பதோடு 

உங்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் உங்களை சாரந்தவர்களும் மன உளைச்சலை கொடுத்துவிட்டுச் செல்கிறீர்கள்.
தற்கொலை முயற்ச்சியை கை விடுங்கள்.
வெற்றி உங்கள் கையில்.
காதல் தற்கொலைகள்: அதே போல் காதல் தற்கொலையும் அதிகரித்து வருகிறது.  இதற்கு சில முக்கிய காரணங்கள்: ஒருதலை காதலாக இருக்கலாம் (அ) வீட்டார்கள் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் அல்லது சரியான நபரை தேர்வு செய்யாமல் இருக்கலாம்.

1) ஒருதலை காதல் தோல்வி என்பது முட்டாள் தனத்தின் விளைவு.  நாம் காதலிக்கும் ஆணோ பெண்ணோ  நம்மை அவர்கள் காதலிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் கண்மூடித்தனமாக காதலித்தால் அது உங்கள் முட்டாள்த்தனம்தானே ? அதற்க்கு பரிகாரம் தற்கொலையா?  அல்ல. அவருக்கு பதிலாக தன்னை விரும்பும் ஒருவரை மணம் புரிந்து சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள் .

2) தவிர  பெற்றோர் /வீட்டார் எதிர்ப்புக்கு காரணம், அல்லது ஜாதியாக இருக்கலாம் அல்லது படிப்பிலோ தரத்திலோ காதலிக்கும் எதிர் நபர் தகுதி இல்லாமல் இருக்கலாம். இது போன்று எந்த காரணமாக இருந்தாலும் உண்மையான காதலுக்கும் உங்கள் துணிச்சலுக்கும் தடையே இல்லை.
தூக்கில் தொங்குவதை விட உங்கள் குடும்பத்தார் சொல்பவரை அல்லது நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொண்டு உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் முன் சிறப்பாக சந்தோஷமாக அவர்கள் எதிர பார்த்ததைவிட ஒருபடி மேலாக வாழ்ந்து காட்டுங்கள். பின்பு ஏன்
ஏற்றுக்கொள்ள   மாட்டார்கள்.அந்த பொறுமையோ எதையும் எதிர்கொள்ளும் துணிவோ இல்லாதவர்கள் ஏன் காதலிக்கிறீர்கள்.காதல் என்பது புனிதமானது துணிச்சலானது. எனவே தடயங்களை தகர்த்தி வாழ்ந்து காட்டுங்கள்
கோழைத்தனத்தை அகற்றுங்கள் துணிச்சலை கடைபிடியுங்கள். தற்கொலையை கை விடுங்கள்  .
இதுவே நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்யும் நற்பனியாகும்.
அனைவரும் இன்புற்று வாழ்வதே அனைவரின் விருப்பம்
அன்புடன்
சுந்தரராஜன் -9003095640
நங்கநல்லுரிலிருந்து
எழுதிகிறேன்

எனது ண்ணத்துகள்களை என் சிற்றறிவுக்கு
தோன்றியதை எழுதியுள்ளேன் .
பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ளவும் 

இது தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டோ
மனதிற்க்கொண்டோ எழுதப்படவில்லை
அனைத்தும் கற்பனையே ::::::
குரு சிஷ்யன்

குரு என்பவர் யார்  எப்படி இருப்பார்?? :அவர் நடத்தை நல்லதாகவும்
அவர் தொழிலில்  சிறப்பாக செயல் படுபவராகவும், கீழ்த்தரமான குணம்
இல்லாதவரும்  உயர்த்த,  நேர்மையான சிந்தனைசெயல்பாடுகள்   உள்ளவராகவும்,
அவரை  மற்றவர்கள் பின்படுதும்படியாகவும் உள்ளவர்களையே குரு என்று
ஏற்றுக்கொள்ளலாம். அப்படி அல்லாதவர்களை  எந்த விதத்திலும் குருவாக
என்ற சொல்லுக்கே அருகதையற்றவர்கள் எனலாம்.
மேலும் இவர்கள் தன் சிஷ்யர்கள் என்று  நினைப்பவர்கள் தன்னை குருவாக
ஏற்றுக்கொண்டார்களா என்பதைக்கூட அறியாமல் தன்னை குரு என்று
தம்பட்டம் அடித்துக்கொள்வர்.
முதற்கண் குரு  என்று தன்னை நினைப்பவர்கள் :அவர்களுக்கு முக்கியமாக
தியாக மனப்பான்மை இருக்க வேண்டும்.  நாம் யாருக்கு என்ன செய்துள்ளோம்
யாருக்காக எதை விட்டுகொடுத்துள்ளோம் நமக்கு யார் யார் என்ன என்ன உதவிகள்
செய்துள்ளார்கள் அதற்கு நாம் பிரதி உபகாரம் ஏதாவது செய்துள்ளோமா.
யாருக்காவது ஏதாவது  கொடுதுள்ளோமா, என்றும், சுயநலமல்லாமல் பொது
நலமாக ஏதேனும் செய்துள்ளோமா, என்பதையெல்லாம்  சீர் தூக்கிப் பார்க்க 
வேண்டும்.முதலில்  தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சாதனை என்பது தகுதிக்கும் திறமைக்கும் கிடைக்கவேண்டும்.
வயதிற்கும் வருடத்திற்கும் கிடைப்பதில்லை. அப்படி என்றால்
மரம்,  செடி, கோடி, சுவர், மண்,  கல் போன்றவைகளுக்கும்
இந்த சாதனை பொருந்தும் .
இந்த லக்ஷ்ணத்தில் :  எந்த  பாரம்பரியமும் சரித்திரமும் இல்லாதவர்கள் 
தன்னை நல்ல பாரம்பர்யத்தின் வாரிசாக காட்டிகொல்வதற்க்காக
இல்லாத பெயர்களையும் ,பல பொய்யான தவல்களையும் கூறி,
தன்னை ஸ்திறப்படித்து கொள்வர்
நடிப்புத்துரைக்கும் இதற்கும் சிறு சம்பந்தம்.
நடிகர் திலகம் செவாலியர் என பல பாராட்டுக்குரியவர் பல படங்களில் பல
பாத்திரங்களை சிறப்புறவும் மை சிலிர்க்கவும் செய்தவர் , மற்றும்  நடிப்புத்
 திறமைக்காக  பல பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றவர் நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்அவர்கள். மேலும் S.V. சுப்பையா ,நாகையா S.V.ரங்கா ராவ்
இப்போதுள்ள  திரு டெல்லி குமார், டெல்லி  கணேஷ் ,நாசர் போன்ற பல நடிகர்கள்
பல குணச்சித்திர கதா பாத்திரங்கள் செய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஒரே கதா  பாத்திரத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும்
கதா பாத்திரத்தின் பெயரை பட்டப் பெயராக சூட்டிக்கொள்வதில்லை
அவர்கள் அப்படி செய்தாலும் தகும்.
அனால் சிலர் புகழ் கியாஜியில்,  எங்கே கதாப்பாத்திரத்தின் பெயரை சூட்டிக்கொண்டால்
கதாசிரியருக்கு புகழ் போய்விடுமோ என்று எண்ணி கதா பாத்திரத்தின் உறவை
தன்  பட்டப் பெயராக சூட்டிக்கொள்வர்.
பாவம் இப்படிப்பட்ட  திறமைசாலிக்கு யாரும் எந்த பட்டமும் வழங்க வில்லைபோலும்.
வாழ்க உண்மை/திறமை  வெல்க நேர்மை
உண்மை விரும்பும்
சுந்தரராஜன்
முயற்சித் திருவினை ஆக்கும் என்று சொன்னார் வள்ளுவனார்
முதலில் மக்களை முயற்சி செய்ய அனுமதிக்கவேண்டும்!
                   எது எப்படி சாத்தியம்             

" பாமர மக்களுக்கு  இலவசங்கள் பல! குறைந்த விலையில் பல!
படித்து வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு பணம்படிக்காததால்
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உதவித்தொகை மற்றும்
ஓட்டுக்கு பணம் , வீட்டுக்கு பணம் போட்டிக்கு பணம்  மலிவு 
விலையில் பொருட்கள்.

மேலும் வாராத கடன்கள் பல உதாரணங்கள்:: தகுதியற்றவர்களுக்கு கடன் 
தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை இப்படிப்பல! இது ஒரு புறமிருக்க விவசாய நிலங்கள் அனைத்தும்
குடியிருப்பு  பகுதிகளாக மாறி வருகிறது. ஏழை விவசாயிகளிடமிருந்து   
குறைந்த விலையில் வாங்கி பன்மடங்கு லாபத்திற்கு வீடாக்கி
விற்க்கபடுகிறது இப்படி இருக்க விளைச்சலில்லை, விளைச்சலுக்கோ நிலமில்லை,
எனவே  பொருளாதாரம் உயர வாய்ப்பில்லை  பன்மடங்கு சரிந்து வருகிறது.

இந்நிலையில் பிரசவத்திற்கு இலவசம்,  குழந்தை படிப்பிற்கு இலவசம், பிறகு கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருப்பது பெண் சிசு என்றால்  திருமணதிற்கு  இலவசம் இப்படியாக எல்லோரும் இலவசதிற்க்கு அட்மைகலாக மாறிக்கொண்டே  போனால்
நாடு எப்போது முன்னேற்ற பாதையில் மாறும். மனிதர்களிடம் உழைப்பு போய்விட்டது எல்லோருக்கும் எல்லாம் இலவசமாக  கிடைத்தால்  ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம்
தோன்றினால் 
எது மாறுவது எப்போ மாற்றுவது யார்???

இங்ஙனம்
சுந்தரராஜன் 


பெருமைக்குரிய முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் மாண்புமிகு M.G.R அவர்கள்  VM ஜனகியோடு அட்வோகேட்
ஜெனெரல் NC ராகவாச்சாரியார் அவர்களின் சஷ்டியப்த பூர்த்திக்கு
1980 இல் வருகை தந்தபோது அவர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்க
அடியேனுக்கு
வாய்ப்பு கிடைத்தது என்பதில் பெருமை கொள்கிறேன்.

தங்கள் மேலான கருத்தை வரவேற்கும்
அன்பன் சுந்தரராஜன்

Sundararajan Srinivasan threeyesstar@gmail.co