Tuesday, March 24, 2015

ஹாங்காங்கில் தமிழ் மொழி பயிற்சி

      ஹாங்காங்கில்   தமிழ் மொழி  பயிற்சி தொடங்குவதாக படித்தேன்.                                                                               --------
சென்ற ஞாயிறு ஒரு செய்தித்தாளில் (22/03 /15)-வெளிநாட்டு செய்தியில் -ஹாங்காங் என்ற நாட்டில்
 தமிழ் மொழி  பயிற்சி தொடங்குவதாக படித்தேன். அங்கு நமது தாய்மொழி தமிழை கற்றுத்தர 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள்  ஆர்வம் காட்டி வருகின்றனர் அதற்கான முயற்ச்சிகள் செய்து வருவது பாராட்டுக்குரியது.இந்த முயற்சி தமிழர்களாகிய நாம் வசிக்கும் த மிழ் நாட்டிற்கு மிக மிக அவசியம் தேவைப்படுகிறது .
முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்களு க்கும் மற்றும் மீடியாக்களில் தமிழ் பேசுபவர்களுக்கும்
தமிழை தமிழாக உச்சரிக்க மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது.

மேலும்  பல தமிழர்களுக்கு சரியான தமிழ் உச்சரிப்பு தெரியவே இல்லை.

எனவே இந்த சேவையை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் ஆர்வலர்கள் தங்கள் மீடியாக்கள் செய்த்தித்தாள்கள்  மூலமும் சம்மந்த்தப்பட்டவர்களை அணுகி தமிழ் நாட்டில் பல தமிழ் பயிற்ச்சி மையங்களை  தொடங்கி எல்லோரும்
 சரியான தமிழ் உச்சரிப்பை பயன்படுத்த தமிழை காப்பாற்ற, தமிழ் வளர தேவையான முயற்சிகளை  எடுத்து தமிழகமெங்கும்/உலகமெங்கும் உள்ள அனைவரும் தமிழ் தெளிவாகவும் சரியான உச்சிரிப்போடும் 
பேச ஆவன நடவடிக்கை எடுக்க உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.

வாழ்க தமிழ்

இப்படிக்கு  தமிழ் ஆர்வலன் சுந்தரராஜன்

No comments:

Post a Comment