Tuesday, April 15, 2014


குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் 
சென்னை மாநகரம் 

இந்த  துறை சார்ந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நங்கநல்லூரில் TNGO Colony முதல் தெருவில் கிட்டத ட்ட  30-40 வீடுகள் உள்ளன.
கடந்த   15-20 நாட்களாக தெருவின் தொடக்கம் முதல் கடைசி வரை  மழை நீர் கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. வீட்டு நுழை வாயிலை ஒட்டியவாறு 3 அடி நீளம் 4 அடி ஆழம் தோண்டி உள்ளது . நாங்கள் வெளியே செல்லவும் வாகனங்களை எடுக்கவும் பாதுகாப்பாக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஒரு மாதிரி நாங்களே எகிறி குத்திச்சு ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு சமாளித்து வருகிறோம். தெருவாசிகள் அனைவரும் இந்த பணிபுரிபவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் உதவியும் செய்து வருகிறோம்.
அனால் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் வெளியே வர சங்கடப்படுகின்றனர்.  .

மேலும் குடி நீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உடைக்கப்பட்டு அவைகளை சரியாக தரமாக மூடாமல் மன்னைத்தூவி சிமென்ட் பலகையால்  மூடி விடுகின்றனர்.
கடந்த 15 நாட்களாக சரி வர குடிநீர் வருவதில்லை. கேட்டால் அவர்களிடமிருந்து சரியான முறையான பதில் இல்லை.

குடிநீர் வாரியமும் பள்ளம் தொண்டியுள்ளதால் லாரி வருவதில்லை ரோடுக்குச்சென்றும் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. பூமி தண்ணீரும் 
தேவையான அளவிற்கு கிடைப்பதில்லை.  

எங்கள் தண்ணீர் இணைப்புகள் சரியாக இணைக்கப்பட்டு குடிநீர்  சீராக வரவேண்டும் சாலையை சீர்படுத்தி சுலபமாக நடமாட வழி செய்ய  வேண்டும். 

இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையை அணுகி  துரிதபடுத்தும்
பணியை  தினமலர் பத்திரிகை மூலம் செயல் படுத்த முடியும் என நம்புகிறோம் .

அன்புடன் 
சுந்தரராஜன் 
நங்கநல்லூர் TNGO Colony பகுதிவாசி       
No.19,Ist Street, Nanganallur
சென்னை 


சிறு தொழில் வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரவேற்க்கத்தக்கது  
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுச்சென்றானே தவிர அவனது கலாச்சாரம் நாட்டில் இன்னும்  குறையவில்லை அதிகமாக உள்ளது .கிராமம் முதல் நகரம்வரை மக்கள் மேலை நாட்டு நகரீகத்த்தியே மிகவும் விருபுகின்ற்னர். இவ்வளவு ஏன் ஆடைகள் முதல் அடுப்பு ஏரிக்கும் பொருள்கள்வரை பெரும்பாலான் வீட்டில் மேலை நாட்டு பாணியில்தான் உள்ளது.   
அனைவரின் கவனத்திற்கும் : உங்கள் வீட்டில் எத்துனை வெளி நாட்டுப் பொருட்கள் உபயோகத்தில் உள்ளன எத்துனை பேர்கள் வெளி நாட்டில் பணியில் உள்ளனர்கள் இவற்றை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.. 

எதிற்ப்பு தெரிவிப்பவர்களுக்கு: சமீபத்தில்கூட ஒரு செய்தித்தாளில் பார்த்தோம் ஒரு அங்காடியில் கெட்டுப்போன, காலாவதியான் உணவுப்பண்டங்களை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவலம்.::

இம்மாதிரியான ஊழல்கள் வால்மார்ட் போன்ற அன்னியர்களின் அங்காடிகளில் செய்வதில்லை.  பொருட்கள் கெட்டுபபோனாலோ காலாவதியானாலோ வெளியே எறிந்து விடுவார்கள் விற்ப்பனைக்கு வைக்கமாட்டார்கள்.
மேலும் தரமான பொருட்கள் மட்டுமே அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அனைத்துத்தரப்பினரும்
இம்மாதிரியான கடைகளையே நாடுகின்றனர். மேலும் மக்கள் தரமான பொருட்களையே விரும்பி வாங்குகின்றனர்..

தரமற்ற பொருட்களை யாரும் வாங்குவதில்லை, பொருட்களின் விலை பார்த்தும் வாங்குவதில்லை. இந்த விதத்தில் யாரும் ஏழை எளியவர்களில்லை. மேலும் மக்களிடம் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.
நம்ம ஊர்களில் காய்கறி அங்காடிகளில் மீதமான , அழுகிப்போன பதார்த்தங்கள் ஓட்டல்களுக்கு சப்பளை
செய்யப்படுகின்றன. மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் அனைதுப்போருட்களும் செகண்ட்
சேல்ஸ், சகாய விலை என்ற நேர்மையற்ற ஊழல் முறைகள் ஏராளமாக உள்ளன. இதற்கு ஏழை எளிய
மக்களை பலியாகின்றனர். 

இப்படிப்பட்ட விற்ப்பனையாளர்களிடம் தரத்தை எப்படி எதிர்பார்க்கமுடியும்.இவர்கள் ஏன் அந்நிய முதலீட்டையும் அந்நியர்களின் அங்காடியையும் ஏதிற்க்கிறார்கள்? இவர்களால் ஒழுங்குமுறை 
விற்பனை செய்ய இயலாது, மேலும் தரத்தையும் உயர்த்தமாட்டார்கள். ஏன் இந்த விதண்டாவாதம். வியாபாரத்தில் போட்டி இருந்தால்தான் வியாபாரம் பெருகும் தரம் உயரும். பல அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் தொழிற்சாலைகள் தொடங்க அந்நிய நாட்டவர்களை பரிந்துரை செய்கின்றனர். 
இதனால்  இந்திய வர்த்தகம் பெருகும் பொருளாதாரம் உயரும் பலருக்கு வேலை வாய்ப்புக்கள் 
கிடைக்கும்.  சிறுதொழில் அந்நிய  முதலீடும் அப்படிதானே. நமது நாட்டில் உள்ள சிறு தொழில் வியாபாரிகள் தனது வியாபார முறையை ஒழுங்குபடுத்துவர், தரத்தை உயர்த்துவர் வியாபாரம் பெருகும் இதில் என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது .

எனவே சிறுதொழில் வியாபாரத்தில் அந்நிய முதலீடு வரவேற்க்கத்தக்கதே என்பது பலரது விருப்பமாகும்.
வாழ்க வர்த்தகம் வளர்க இந்திய பொருளாதாரம் 
ஜெய்ஹந்த் :::