Thursday, April 14, 2011

தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் 2011 ஐ பொறுத்த வரையில் இந்த முறை தேர்தல்
ஆணையம் மிகவும் சிறப்பாக செயல் பட்டு இருக்கிறது. குறிப்பாக நகரம் முழுக்க வேட்பாளர்களின் வானுயர பேனர்கள், கட் அவுட்டுகளை  அகற்றி நகரத்தின் அழகு சீர் குலையாமல் பாது காத்தனர்.

அதே சமயம் தேர்தல் அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் தங்கள் பணியை
நேர்மையாகவும் சரியாகவும், திறம்பட, மற்றும்  கட்சிகாரர்களுக்கு விலை போகாமல் பணி புரிய  அவர்களுக்குத்  தேவையான அடிப்படை  வசதிகள், குறிப்பாக சுத்தமாக சுகாதாரமாக  பராமரிக்கப்பட்ட இடங்களை வாக்குச்சாவடியாக தேர்வு செய்து, பெண்களுக்கென்று,ஆண்களுக்கென்று தண்ணீர் வசதியுடன் கூடிய தனித்தனி  கழிப்பறை மற்றும் உணவு/சிற்றுண்டி ஆகியவை தேர்தல் ஆணையமே வழங்கி இருக்க வேண்டும்.   தவிர  உணவருந்த  சுகாதாரமான, சுத்தமான இடம், குடிநீர்  இவைகள் அனைத்து   தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா  என்று தேர்தல் ஆணையம்  ஒவொரு ஓட்டுச்சாவடிகளிலும் உரிய அதிகாரிகளைக்கொண்டு நேரில் சென்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் பல ஓட்டுச்சாவடிகளில் மேலே குறிப்பிட்ட எந்த வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை. இது போன்ற  அடிப்படை வசதிகளையும் முக்கியமாககக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே ஆவன செய்திருந்தால் இந்த வசதியைக்  காரணம் காட்டி ஆணையத்தின்
அதிகாரிகளோ ஊ ழியர்களோ, தேர்தல் எண்ணிக்கை முடிந்து நியாயத்தின் வெற்றியை அறிவிக்கும் வரை கட்சிக்காரர்களுக்கு விலை போகாமல் ஜன நாயகம் பாது காக்கப்படும் .

மேலும் இது போன்று தொண்டு செய்பவர்களுக்கு  முழு பாதுகாப்பு
அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
இதுவே ஜன நாயக மக்களின் வேண்டுகோள்.

வாழ்க ஜனநாயகம் 
வந்தே மாதரம்